Tuesday, November 11, 2014

ஒரு உயிர்த்துகளில் உனை வடிக்க

நீ பாசிடிவாய் தெரிந்தாய் 
ப்ரோடான் நீ எனக்கொண்டு 
எலேக்ட்ரானாய் சுத்தினேன் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை  
நீ எனை நெகடிவ் அ பாத்தாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
நீ எனை தூரம் வைத்தாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
ஒன்னும் இல்லாத நுட்ரானை உன் நட்பென்றாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
என்றாவது ஓர் நாள் புரிந்து கொள்வாய் 
நான் எலேக்ட்ரோனாய் இருப்பதால் தான் 
நீ ப்ரோடோனாய் இருக்க முடிந்தது என்று 

Thursday, October 30, 2014

கல்வி - பிச்சை புகினும் கற்கை நன்றே


நீண்ட நாட்களாய் எழுத வேண்டும் என்று நினைத்த பதிவு, மனதின் உண்மையை அப்படியே பதிவிட முடியாது, அங்கங்கு சீர்திருத்த வாதிகள் இல்லாத காரணத்தாலும் அரசியல் நிறைந்த சுழல் இருப்பதாலும் என் எழுத்துக்களை சீர்திருத்த முயற்சித்திருக்கிறேன்.


கல்வி - அப்படியே பின் நோக்கி 50 வருடம் போங்க, வெள்ளைக்கார தொரை நாமளா என்னத்தையோ  வச்சு விட்டுட்டு போய்ட்டான் . சரி அப்போ எத்தன பள்ளிக்கூடம் இருந்துச்சு எல்லாருமே இந்திய பிரஜைனு வாயால சொன்ன போதுமா, எல்லாருக்கும் சமமான கல்வி கிடைத்ததா? சரி கிடைக்கலை னு தெரிஞ்சாச்சு தனியார் கல்வி  மயம்  வேணுமானு  யோசிச்சு அரசு அதை கையில் எடுத்துருக்கணும், எடுக்கல. எடுக்கல னு பட்டுன்னு சொல்லிட முடியாது மதிய உணவு , கல்வி என்று ஒரு பக்கம் இருந்தாலும் அது எந்த அளவுக்கு தனியார் கல்வியோடு (கான்வென்ட்) ஒத்து போச்சு ன்னு பாக்கணும். கேந்திரிய வித்யாலயா னு அரசு அதிகாரிகளின் குழந்தைக்கு கிடைத்த கல்வி ஏன் எங்கோ ஓர் கொட்டாம்பட்டி குழந்தைக்கு கிடைக்கவில்லை. நாம் அங்கேயே இருவருக்குமான ஓர் கண்ணுக்கு தெரியாத கோடு போட்டு விட்டோம். அடுத்ததடுத்து இவர்களுக்கு கிடைப்பவை  எல்லாம் இவர்களுக்கு கிடைக்காமலே போகும். இங்கே நான் கூற விளைவது அவர்களுக்கு கல்வி கிடைத்ததே என்று இல்லை இவர்களுக்கும் அது கிடைக்குமாறு செய்திருக்கலாமே என்று தான். 3% கல்விக்கான செஸ் எங்க போகுது என்று கேட்க நேரமில்லாத தைரியம் இல்லாத கல்வி முறை தான் தனியார் பள்ளிகளில் கற்பிக்க படுகிறது என்று எடுத்து கொண்டாலும் அது இவுங்களுக்கும் கொடுத்துவிட்டு போங்க. இதெல்லாம் கேக்குறதுக்கு அவ்ளோ அறிவ கொடுத்த தான பிரச்சனை அதையே தடுத்திருவோம்னு நினைச்சிடாங்க போல. தமிழன் என்று சொல்லி தலை நிமிர முயற்சி செய்வோம்.

Tuesday, September 9, 2014

தனிப்பெருவனம்

என்றுமே அரசியலை பேசுவோமே தவிர தனி பெருவனம் பற்றி அதிகம் என் நெருங்கிய வட்டம் தவிர பேசுவதில்லை என்று தீர்மானித்து இருந்தேன். இன்று நம் முக்கிய மந்திரி திரையில் வரவும், இவனும் ஒன்னும் பண்ண போறதில்ல என்று சொல்லி விட்டேன் என் முன் அமர்திருபவர்கள் அலுவலில் நண்பர்கள் ஆயினும் பல பேதங்கள் உண்டு அவர்களுக்கும் எனக்குமான கருத்தியலில். ஹிந்துத்வா தெரியாத ஹிந்து களே என்று சொல்லி கொண்டு தினம் ஹிந்துத்வா பேசும் ஒருவர், ஹிந்துத்வா வில் என்ன தப்பு என்று கேட்கும் ஒருவர். அப்போ நீ பழைய ஆட்சியை விரும்புபவனா என்று கேள்வி கேட்கும் ஒருவர். அப்போ நீங்க ஆம் ஆத்மி புடிக்கும்னு சொலுங்க என்று தன பக்கம் இழுக்கும் ஒருவர். அதுல எத்தன பேத்துக்கு பிந்திய வரை படத்துல எத்தன மாநிலம் இப்போ இருக்குனு கேட்டாலும் தெரியாது. இவனுங்க எனக்கு இந்தியாவுக்கு என்ன முதல் தேவை என்று வேற லிஸ்ட் போடுவானுங்க. தமிழ் நாட்டுல தமிழ் பேசுனாலே அடிக்கிற பள்ளி கூடங்கள் இருக்குற இடத்துலேயே இந்த கதி தான். சரி இப்போ இவர் என்ன பண்ணனும் சொல்றீங்க கிஸ்தான் கூட சண்டை போடா கூடாதா என்றவர் அப்போ கங்க்ல கூட போடுவோமா னு கேட்டார். சாமி உனக்கு அவன் எதிரி எனக்கு இவன் துரோகி னு ஒரே வார்த்தைல சொல்லி முடிச்சாலும் அவன் அந்த காலத்துல செய்ததுக்கு  இப்போ என்ன பண்ணனும் அப்டினா என் வாயில பல சொல் தனிதனியா வந்தாலும் ஒரு நல்ல சொல்லு சொல்ல வரல என்ன இது (தொடரும்) 


 

Saturday, February 16, 2013

அந்தோனி பூனை..

பொறைக்காக மணி அண்ணன் கடை வாசலில் கையேந்தி நின்றிருந்த அந்தோனிக்கு
புத்தி சரி இல்லை மற்றவர் புத்திக்கு தெரியும்..
அவன் கைகளில் இருந்தது சாம்பல் கலந்த கருப்பு பூனை, வீடுகளில் மீன் சொச்சம் தேடி உருட்டும்.. அதுவும் தெரியும் அவர்க்கு..
அவர்களுக்கு தெரியாத ஒன்று
மணி அண்ணன் கொடுத்த பொறையும் பாலும் அந்த பூனைக்கு கொடுக்க இருந்த புத்தி மட்டும் இருந்த அந்தோனி பார்க்க முடிவதில்லை இப்போது மணி அண்ணன் கடையில்..

Saturday, January 26, 2013


எதார்த்தம் என்ற பெயரில்

உள்ளறிவும் உயிரும் சேர்த்தே மூளையின் கூறுகள்..
சிலர் உயிர் மட்டுமே வைத்து அறிவிழந்தனர்,
அவர்கள் பைத்தியம்..
மற்றும் சிலர் அறிவை மட்டுமே வைத்து உயிர் அற்று வாழ்ந்தனர்
அவர்கள் சிந்தனையாளர்கள்..
மற்றும் ஒரு சிலரோ இரண்டும் அற்று வாழ்ந்தனர்,
அவர்கள் நாம் தானோ..

Sunday, October 7, 2012

பட்டாம் பூச்சிகளின் தேசம்


Wednesday, July 18, 2012

காற்றின் பெயரே தெரியாது

தெற்கே வந்தால் தென்றல்
வடக்கே வந்தால் வாடை
கிழக்கே வந்தால் கொண்டல்
உன் மேனி தொட்டு வரும் காற்றுக்கு
பெயர் இல்லை இந்த தமிழுக்கு..
பஞ்சம் வந்ததோ தமிழுக்கு ..
வஞ்சம் செய்ததோ எனக்கு தமிழ் தெரியவில்லை
லஞ்சம் கொடுக்கவும் தயங்கவில்லை
உன் மேனி தொட்டு வரும் காற்றுக்கு பெயர் வைக்க..