Sunday, April 24, 2011

தேடல்

தேடி கிடைப்பதில்லா ஓர் பொருளை தேடி தேடி நாம் தொலைவோம்..
தேடி கண்டுபிடித்தும் கண்டு மகிழ முடியாது அதுவே தொலைந்து போன பெட்டகம் என்று நாம் அறிவோம்..
இருந்தும் தேடி கொண்டே இருப்போம் அந்த காண முடியா பொருளை, கடைசியாக கண்டு கொள்வோம் ஆனால் காண நாம் இல்லை இங்கு..
ஒன்றில் முடிவதே இன்னொன்றில் தொடங்கும்..
ஆதியும் அண்டமும் எங்கிருக்கும் தெரிந்த பின்பும் தேடி தொலைந்து போவார்கள் இம்மாந்தர்கள்.. மந்திகளாய், மாறிலவெ..

Labels: ,

Thursday, April 21, 2011

முதல் புகை வண்டி பயணம்..


பயணங்கள் பலருக்கு பலவாறு பல அனுபவங்களை கொடுத்திருக்கும், ஆனால் ஒவ்வரு பயணமும் புது அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. முதல் பயணம் பொதுவாக நமக்கு நினைவில்லாத வயதில் தொடங்கியிருப்பதால் அதில் பெரிய நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதே பயணம் மீண்டும் நமக்கு கிடைக்கப்பெருமாயின் உண்மையாகவே கொடுத்து வைத்தவர்களுக்கு தான் அமையும். முதல் நீண்ட பயணம் எனக்கு நினைவு தெரிந்து கொல்லம் - சென்னை புகை வண்டி பயணம்(இப்போது அது செங்கோட்டை - சென்னை பொதிகை ஸூபர் பாஸ்ட்எக்ஸ்ப்ரெஸ் தமிழ் சொற்களை விட ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாக தான் இருக்கிறது).
இன்னமும் நினைவிரிக்கிறது முதல் முறை தென்காசி புகை வண்டி நிலையம் சென்று, அப்பா எப்போ வரும், எப்படி வரும், எங்க இருந்து வருது, நாம எங்க போறோம், இப்படியாய் நான் கேட்ட அனைத்திற்கும், பொறுமையாய் பதில் சொல்லி கொண்டிருப்பார் அப்பா. உள்ளே சென்று தேநீர் பருகியதும் (ப்லாஸ்டிக் அரக்கன் மெல்ல நுழைந்த காலம் அது), இது எதற்கு, அது அதற்கு என்று கேள்விகள் கேட்டு தூங்கி போன நான் விழித்து பார்க்கையில் இருந்தது அந்த பொழுதின் கனவு தேசமாக நான் எண்ணிய சென்னையில்.. சென்னையில் மாமா வீட்டில் இருந்து, மஞ்சள் அம்போசிடர் காரில், பயணம் செய்ததாகவும், ராயப்பேட்டை மணி கூண்டை பார்த்ததும், ஜெமினி மேம்பாலம் அருகில் எனக்கு வெள்ளை கான்வாஸ் ஷூ வேண்டும் என்று அழுதததும், தான் நினைவில் இருக்கிறது.

பயணம் தொடரும்...

Labels: , , , , , , ,